பீகார், உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த காற்று, இடியுடன் கனமழை: 40 பேர் பலி
பாட்னா,
பீகார், ஜார்கண்ட், மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு புயல் மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி பீகாரில் 18 பேரும் ஜார்க்கண்டில் 13 பேரும், உத்தர பிரதேசத்தில் 9 பேரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்டில் 3 பேர் பலியானதாகவும் மேலும் பலர் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழை மற்றும் பலத்த காற்று ஆகியவற்றால், அங்குள்ள பகுதிகளில் மின்விநியோகமும் பாதிக்கப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.



Comments
Post a Comment